உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.

Sunday 2 March 2014

வசிய மூலிகை சாப நிவர்தி மந்திரம்



வசியம். தேவவசியம்
 
 நாக மல்லி என்கின்ற செடியைப் பிடுங்க மந்திரத்தை சொல்லப் பாடுகிறேன் கேள்
 
 "ஜெய ஜெய ஓம் கிலியும் பகவதா"
 
 என்று மந்திரம் ஜெபித்து பிடுங்கிவந்து நிழலில் காயவைத்துப் பொடிசெய்து துணியில் வைத்து உருட்டி திரியாக்கி ஒரு விளக்கில் காராம் பசுவின் நெய் விட்டு முன் செய்த திரியை அதில் போட்டு எரித்து அந்த மையை எடுத்து திலகமாக நெற்றியில் இட்டால் தேவர்கள் எல்லாம் வசியமாவார்கள்
 
.
 மிருகவசியம்
 
வெண் குன்றி மூலிகை வேர் எடுக்க,
 "வம் வம் வசி வசி மிருகவசீகரி ஓம்"
 என்கின்ற மந்திரத்தை சொல்லி, வேரைப் பிடுங்கி எடுத்து வாயில் போட்டுக் கொண்டு எந்த மிருகத்தை அழைக்கிறோமோ அது வசியமாகும்
 
 .
 லோகவசியம்
 
 
 கோணான வானை எனும் (ஆனை வணங்கி) மூலிகையின் சாபம் நீக்குவதற்கு மந்திரம்
 "றீங்ரீ"
 என்று லட்முரு ஓதி எடுத்து உன்னுடன் வைத்துக் கொண்டால் உன்னை எதிர்த்து வரும் கோடிப் படையானாலும் தலை வணங்கும் மூலிகை தானே, என்கிறார். இன்னுமொரு முறை > விஷ்ணு கறந்தை செடிக்கு சாபம் நீக்குவதற்கு மந்திரம் எதுவென்றால், என் மாணவர்கள் அறிந்து கொள்வதற்காய் சொல்கிறேன்.
 "சிம் சிம் சிம்" 
என்று ஒருலட்சம் முறை செபித்து பிடுங்கி வைத்துக் கொண்டால், இந்த உலகத்தில் சித்தனென்ற பெயரெடுக்கலாம். என்கிறார் .
 
 
 லோகவசியம்
 
 
 பூனை வணங்கி என்கின்ற செடிக்கு சாபம் நீக்குவதற்கு மந்திரம் எதுவென்றால்
 "தூ தூ "
 என்று ஓத சாபம் நிவர்த்தியாகும். சகல பலம் பொருந்திய மன்னரையே மயக்கக் கூடிய இந்தத் தழைக்கு ஒருலட்சம் தடவை "தூ தூ " என்று ஓதி உருக்கொடுத்து பிடுங்கி வைத்துக் கொண்டால் இந்த நாடு எல்லாமே உனக்கு வசியமாகும்
லோக வசியம்
 
 
 லோக வசியம் மூலிகை பெயர்: மூக்கிரட்டை.{சிகப்பு சாரனை} மூலிகை படம் பூஷ நட்சத்திரம் வரும் நாள் பிரம்ம முகூர்த்தத்தில் காலை நேரம் 3.30 இல் இருந்து 5.30 நேரத்திர்குள் மஞ்சள் நூல் காப்பு கட்டி மூலிகை சாப நிவர்தி செய்து உயிர் கொடுத்து வேர் பிடுங்கி வலது கையில் கட்டிகொள்ள வசிகரசக்தி கிடய்க்கும் .
 
 
 மூலிகை சாப நிவர்தி மந்திரம்
 
 ஓம் மூலி ஓங்கார மூலி சர்வ மூலி சர்வ சாபம் நசி மசி உன் உயிர் உன் உடலில் நிர்க்க சுவாஹா
 உயிர் கொடுக்கும் மந்திரம்
 
  ஓம் நமோ சர்வலோக வசீகராயா குரு குரு சுவாஹா