உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.

Sunday 2 March 2014

காதல்,கணவன்,மனைவி,வசியம்,

 
எத்தகைய வசிய முறையை பின் பற்றினாலும் முதலில் வசியம் படுத்தும் நபரின் லக்ன பலன், தாரா பலன், பஞ்சக பலன் தெரிந்து அதற்கு தக்கவாறு வசிய முறைகளை பயன்படுத்தினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

திருமணமான  பெண்களை வசியம் செய்ய கூடாது
திருமணமான ஆண்களை வசியம் செய்ய கூடாது
குரு ஸ்தானத்தில் இருப்பவரை வசியம் செய்ய கூடாது
விரதம் மேற்கொண்டிருப்பவரை வசியம் செய்ய கூடாது

மதன மேகலா லக்ன பீடம் வைத்து செவ்வாய் வெள்ளிகிழமைகளில்
 மந்திர உச்சாடனம் செய்துவர 
எண்ணிய திருமணம் பலிதமாகும்.
மதன மேகலா என்பது  விஸ்ரூப
 யட்சிணி அதாவது நீர், காற்று, மண்
 தீ போன்ற இயற்கை சக்தியில்
 அட்சராம்சம் கொண்டது. 
மதன மேகலா லக்ன பீடம் 
 ஐந்து அங்குல நீளம் நான்கு
 அங்குல அகலம் கொண்டது 
இதன் உள்ளே ரதிமன்மத வசிய சக்ரமும் விவாக பந்தினி சக்ரமும் பதிக்கப்பட்டிருக்கும். (சில இடங்களில் குறிப்பிட்ட ஆடவனின் ஜாதகமும் பந்தனம் செய்யப்படுவதுண்டு)  பொதுவாக இந்த உபாசனையை நீரில் நின்றுக்கொண்டு செய்ய வேண்டும் ஆனால் குளியலறையில் குளித்து முடித்தப்பின் ஈர உடலோடு ஆடைஏதும் அணியாமல் கிழக்கு நோக்கி நின்று வலது உள்ளங்கையில் பீடத்தை வைத்து இடது கையால் தாங்கி, 

ஓம் ஈம் க்லீம் நமோ பகவதி ரதி வித்மயே மஹா மோஹினீ காமேசி
மம பந்தம் சித்த பதீம்
ஸ்வயம் பூர்வம் பந்தம் வசி குரு குரு ஸ்வாஹா

என்ற மந்திரத்தை ஒன்பது முறைகள் சொல்லி  உடலில் இருந்து நீரை எடுத்து மூன்று முறை பீடத்தை சுற்றி குறிப்பிட்ட ஆடவனை நினைத்து காற்றில் தெளிக்க வேண்டும்

இதை தவிர்த்து காதலில் வெற்றி பெற வசிய பொடி அல்லது சொக்கு பொடியை பயன்படுத்துவதாக மலையாள மாந்த்ரீகத்திலும், சித்தர் வழி முறைகளிலும் சொல்லப்படுகின்றன. குறிப்பாக சிதம்பர அஷ்ட கர்மத்தில் கருவூர் சித்தர் பல முறைகளை சொல்லுகின்றார்

மலையாள மாந்த்ரீகத்தில் இந்திர கோபம்.மதனகாமபூ, 
வெண்குன்றி மணி,சுழல் வண்டு, 
ஈப்புலி, நீர் மேல் நெருப்பு
 போன்றவற்றை அஷ்ட்டாங்க
 திராவகம் எனப்படும் குறிப்பிட்ட
 சில எண்ணைகளை சேர்த்து
 தயாரிக்கப்படும் களிம்பை 
மூங்கில் குறுத்தில் காப்பிட்டு 
வீனாயட்சினி மூலமந்திரத்தை
 ஒன்பது வேளை 1008 உரு ஏற்றி 
பெண்ணின் உடல் திரவத்தோடு 
கலந்து உட்கொள்ள  கொடுக்க 
ஆண்களை வசப்படுத்தமுடியும் 
என்று சொல்லப்படுகிறது.

மரமஞ்சள்.கஸ்தூரி,தாழம்பூத்தாள்,கல்மதம்,பாதிரி, வென்கற்கை ஆகியவற்றுடன் குறிப்பிட்ட சில பூஞ்சைகளை குழிதைலத்தில் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி வெங்கார பற்பத்தில் புடம்போட்டு வாகை பலகையில் வைத்து மதன கன்னிகா மூல மந்திரத்தால் உரு ஏற்றி உணவில் கலந்து கொடுத்தாலும், பாற்குரண்டி வேரில் கணமாக பூசி காயவைத்து குறிப்பிட்ட ஆணின் உடமைகளில் வைத்தாலும்  உச்சிஸ்ட்ட மதன கன்னிகா அந்த ஆணின் உறக்கத்தில் போய் குறிப்பிட்ட பெண்ணோடு சேர உத்தரவு கொடுக்கும் என்று யட்சிணி வசிய நிகண்டு என்ற நூல் குறிப்பிடுகிறது