உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.

Saturday 15 March 2014

ஜால வித்தை குளிகை

 
நாம் வேளியில் வாகனங்களில்  செல்லும் பொழுது விபத்துகளிருந்தும் சில ஆபத்துக்களில் இருந்தும்
ஆயுதங்களினால் காயம் படாமல் தப்பிக்கும்  உபாயமாக இதை கருவூரார் பலதிரட்டு" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது..
 

சித்தர்கள் கூறியுள்ள பல விஷயங்கள் , நம்மை ஆச்சர்யத்தின் விளிம்பில் தள்ளுவனவாகவும் இருக்கின்றன இதை ஜாலவித்தைகள் என்கின்றனர்.

 

 
தாரணி என்ற மூலிகையின் வேர்,  தாளிப்பானை என்ற மூலிகையின் வேர்
இரண்டையும்  சம அளவு எடுத்து அத்துடன்  பூநீர் விட்டு அரைத்து

குளிகையாகச் செய்து கொள்ள வேண்டுமாம். இந்தக் குளிகையினை அணிந்து


கொண்டு நாம் வேளியில் வாகனங்களில்  செல்லும் பொழுது

விபத்துகளிருந்தும் சில ஆபத்துக்களில் இருந்தும்   போரிற்குச் சென்றால்




குத்துகள் வெட்டுகள் அடிகள் ஆகியவற்றின் பாதிப்புக்களில் இருந்து காத்துக்
கொள்ள உதவிடும் என்கிறார்.

  
தாரணி வேரொடு தாளிப்பானைவேர்
கோரமில் லாமற் கூட்டிச்சமனாய்
பூநீரா லரைத்துக் குளிகைசெய்
குளிகை தலைகொள் குத்தேறாது
பழிபடும்போரிற் படாது வெட்டு
ஒளிவிட்டெரிந்த உயர்பாணம் மேறாது
அழிவுறாதிந்த அதிசயக் குளிகையே