உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.

Thursday 17 April 2014

மோசடி ஆஸ்ரமங்களும் பலரை வாழ வைக்கும் ஆஸ்ரமங்களும்

 
இந்த பதிவு நம்மீல் பலர் ஆன்மீகம் என்ற பெயரில் பொருளை  இழந்து  மன நிம்மதி இழந்து மோசடி ஆஸ்ரம ஏமாற்று ஆன்மீகவாதிகளிடம்  சிக்கி சீரழியும்  அப்பாவி  நல்ல ஏமாரும்  இதயங்கலுக்கு  
 
பலரை வாழ வைக்கும் ஆஸ்ரமங்கள்;
 
நான் என் அனுபவத்தில் பல ஆஸ்ரமங்களை பார்த்து இருக்கிறேன்  அந்த ஆஸ்ரமத்தை நடத்தும் நல்ல இதயங்கள் தங்கள் வாழ்க்கையை முதியோர்,  ஊனமுற்றோர்,அனாதை, அனாதை குழந்தைகள்.என்று தங்கள்
வாழ்நாளை அற்பணித்து நேர்மையான முறையில் (நேர்மை" எங்கு, எவரிடம் காணப்படுகின்றதோ அவருக்கு மாந்தரிடையே என்றும் ஒரு மதிப்பும் மரியாதையும் இருக்கும்.) தன் சுய கவுரவம் பார்காமல் தனக்கு ஏற்படும் அவமானங்களையும் பொருட்படுத்தாமல் பிறர் நலமே தன் நலம் என்று வாழ்பவர்கள் மனிதரில் மாணிக்கம். பிறர்   செய்யும் பொருள் உதவி மற்றும்  அன்னதானம்  போன்றவற்றை  இயலாதவர்களுக்கு எந்த சுயநலமும்  இன்றி  கிடைக்க செய்கின்றனர் (இவர்கள்  நடமாடும் தெய்வங்கள் )  
 
 
மோசடி  ஆஸ்ரமங்கள்; ( ஏமாற்றி பிச்சை எடுப்பவர்கள்) 
 
தற்பொழுது திரும்பும் இடங்களில்  எல்லாம் ஆஸ்ரமங்கள் நேற்று தாய்யிடம்
பால் குடி  மறந்தவன்  எல்லாம் இன்று   ஸ்வாமிகள்,  வசிய மை, பாதாள மை, பெண்கள் பின்னால்.வரும் மை, முன்னால் போகும் மை,  தான். என்ன மனதில்
நினைக்கிறானோ அப்படியே இனய தளங்களில் எழுதுவது, பிரச்சனையில் 
உள்ளவர்கள் (எதை தின்றால்  பித்தம் தீரும் என்று இருப்பவர்கள்) இவர்களிடம்  
 தன்  குறைகளை  கூறினால் ஒரு   அரை மணி  நேரத்தில் எனக்கு போன் செய்யுங்கள்
தெய்வங்களிடம்  உத்தரவு  கேட்டு  சொல்கிறேன். சித்தரிடம்  கேட்டு  சொல்கிறேன்
என்று  புருடா விடுவது (இந்த பிரபஞ்சத்தில் தெய்வங்களுக்கும் , சித்தர்களுக்கும் 
எப்பொழுது  பால் குடி  மறந்தவன் நம்மை அழைப்பான் என்று காத்து கிடப்பதாக ஏமாற்றுக்காரர்களுக்கு
 நினைப்பு )  பிறகு தங்களுக்கு தோஸம் உள்ளது அதற்க்கு சில யாகங்கள்
 எங்கள்    ஆஸ்ரமத்தில்  செய்வேண்டும்  அதற்க்கு  இவ்வளவு  செலவாகும்   
 இந்த பணம்  ஆஸ்ரம நிதிக்கு   என்று   புருடா  விடுவது 
(தன்னுடைய  மனைவிக்கும்  பிள்ளைகளுக்கும் சொகுசாக இருப்பதற்க்கு  பிச்சை 
எடுப்பது )    இவர்கள்  ஒரு தர்மகாரியங்களும்  செய்யமாட்டார்கள்  இவர்களுக்கு
தாயத்து  பற்றியும் தெரியாது  எந்திர  தகடுகள் பற்றியும் தெரியாது   கடையில் 
விற்க்கும்  மந்திர தந்திர புஸ்தகங்களை  வாங்கி  வைத்து  கொண்டு கதை
விடுவது மொத்ததில் இவர்கள் நூதன பிச்சைகாரர்கள் . இனய  தளங்களில்
வெளியாகும்  மந்திர தந்திரங்கள்  அனைத்தும் உண்மை அல்ல  உண்மை தெரிந்தவர்கள் புனிதமான மந்திரங்களை  பொதிவில் பகிரமாட்டர்கள்
அஸ்ரமங்களை  நம்பி ஏமாறுவதை விட்டு விட்டு கோவில்களுக்கு
செல்லுங்கள்   உங்கள் கைகலால் அன்னதானம் செய்யுங்கள் மன நிம்மதி  
கிடைக்கும்  இது சத்தியமான  உண்மை.   பொய் கவர்ச்சியாக தான் இருக்கும்
 உண்மை மறைந்தே   இருக்கும்