உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.

Friday 21 February 2014

மாந்தீரிக காந்தசக்தி மூலிகை தொட்டாற்சுருங்கி

 
 
 
 
வன்னிமரம் போல் தெய்வ சக்தி உடைய மூலி கை என்பதால் துளசி போல வீட்டில் வைக் கலாம். நாளும் தொட வாய்ப்பாகும். மாத வில க் காகும் பெண்கள் இச்செடியின் அரு கில் செல்லக் கூடாது, தொடுதலும் கூடாது. தொட்டாற் சுருங்கி மேக மூத்தி ரத்தை நீக்கும், பெண் வசியம் செய்யும், உடலில் ஓடிக் கண்டு கின்ற வாதத் தடிப்பைக் கரைக்கும்
 
 பகரவே இன்னமொரு மூலிகேளு

பாங்கான சிணுங்கியப்பா காப்புக் கட்டி நிகரவே

பூசையிடு மந்திரத்தால் நினைவாக

உத்தமனே தூபமிட்டு வைத்துக் கொள்ளே.” என்பது ஒரு பழம் பாடல், இதன்


 வேரை வழிபாடு செய்து பிடுங்கி மாந்திரீகம் செய்யப் பயன்படுத்துவர்.
தொட்ட உடன் தன்னை ,சுருக்கிக் கொள்ளும் தொட்டாற்சுருங்கி காந்தசக்தி உடைய மூலிகையாகும். இதனை தொடுகின்ற போது அதனுள் இருக்கும் சக்தி மின்சாரம்போல நம்முள் பாயும். நாற்பத்தெட்டுநாள் தவறாமல் தொட்டுவர மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக்கும். நினைத்தது  நடக்குமாம். இதனை நமஸ்காரி என்றும் அழைக்கின்றனர். மனதில் உணர்ச்சியை அதிகரித்து சிற்றின் பத்தை ஊட்டுவதால் காமவர்த்தினி என்றும் அழைக்கின்றனர்

ஒரு பலம் தொட்டாற்சுருங்கி வேரை பஞ்சு போல் தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு தண்ணீர் ஊற்றி சுண்ட காய்ச்ச வேண்டும். பின்னர் வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடு க்கவும். அல்லது ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுத்து வர நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும்
சிறுநீர் கோளாறுகளை போக்கும்
 
ஒரு மீட்டர் உயரம் வளரக்கூடிய இந்த புதர்ச்செடியின் தண்டு மற்றும் இலைக் காம்புகள் முட்களால் மூடியவை. இலைகள் மற்றும் வேர்கள் மருத்துவப் பயன் கொண்டவை.
இலைகளின் சாறு சைனஸ்,மூலநோய், புண் புரைகளுக்கு மருந்தாகிறது. பசை சுரப்பிகளின் வீக்கம் மற் றும் விரை வீக்கத்திற்கு மேல் பூச்சாகிறது. வேர் சிறுநீர் உறுப்பு கோளாறுகளை போக்கும். இதன் இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கம் குரையும். கீழ்வாதம் குரையும்

இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும் பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச் சூடு, ஆசன க்கடுப்பு தீரு ம். சூடு பிடித்தால் சிறு நீர்த்தாரை எரியும். இதற்கு இதன் இலை யை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும். சிறுநீர் எரிச்சல் குண மாகும்
தொட்டாற்சுருங்கி செடி மந்திரீக தன்மை உடையது.